தேர்தல் விதிமீறல்? - தி.மு.க.வினர் மீது புகார் !

தேர்தல் விதிமீறல்? - தி.மு.க.வினர் மீது  புகார் !

புகார்

அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மீது பாமக வேட்பாளர் பாலு ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வளர்மதியிடம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வக்கீல் பாலு புகார் மனு கொடுத்தார்.

அதில், தேர்தல் நடக்க 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர், நிர்வாகிகள் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும், தேர்தல் விதிமீறல் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story