எம்.எல்.ஏ வீடு, பிரபல பட்டுச் சேலை கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

எம்.எல்.ஏ வீடு, பிரபல பட்டுச் சேலை கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீசார் சோதனை 

காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பிரபல பட்டு சேலை விற்பனை கடைக்கும், காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக அடுத்தடுத்து தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூனியர் சீசர் தலைமையிலான போலீசார் காஞ்சிபுரம் நடுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பட்டு சேலை விற்பனை கடைக்குச் சென்று வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினார்கள். பின்னர் மோப்பநாய் நிலா மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சேலை விற்பனை கடையின் முன்று மாடிகளிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இதை அடுத்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வீட்டுக்கும் விரைந்த வெடிகுண்டு போலீசார் வீட்டைச் சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இரு இடங்களிலும் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பட்டுச்சேலை விற்பனை கடைக்கும், அடுத்து திமுக எம்எல்ஏ வீட்டிற்கும் தொலைபேசி மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story