நேரு விளையாட்டரங்கில் தம்பி வெண்கல சிலை

நேரு விளையாட்டரங்கில் தம்பி வெண்கல சிலை

சிலை திறப்பு 

44-வது செஸ் ஒலிம்பியாட்டின் இலட்சினையான “தம்பி” வெண்கல சிலையை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க முகப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 44-வது FIDE செஸ் ஒலிம்பியாட்டின் இலட்சினையான “தம்பி” வெண்கல சிலையை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க முகப்பில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத் தலைமை இயக்குனர் சந்தீப் பிரதான், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story