புறநகர் ரயில்கள் ரத்து - 7 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ

தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று மட்டும் 7 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்கும்.
தெற்கு ரயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 44 புறநகர் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக சென்னை மெட்ரோ ரயில் இன்று ஒருநாள் மட்டும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், சென்னை மெட்ரோ ரயில் சேவை அட்டவணை இன்று ஒருநாள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Tags

Next Story