திருச்செந்தூா் கோயில் பாதையில் தரைவிரிப்புகள் விரிப்பு

திருச்செந்தூா் கோயில் பாதையில் தரைவிரிப்புகள் விரிப்பு

தரைவிரிப்புகள் விரிப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருச்செந்தூா் கோயில் கிரிப்பிரகாரத்தில் பக்தா்கள் நடந்து செல்வதற்கு தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. 
கோடை விடுமுறை நாள்களில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கிரிப்பிரகாரத்தில் பக்தா்கள் நடந்து செல்லும் வழியில் கயிறுகளாலான விரிப்பான்கள் விரிக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தா்கள் நடந்து செல்வதற்கும், அமா்வதற்கும் வசதியாக உள்ளது. அதேபோல, கோயில் அன்னதான கூடம் செல்லும் வழியில் பக்தா்களுக்கு இலவச நீா் மோரும் வழங்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Tags

Next Story