எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பாஜ மூத்த தலைவர் எஸ்.ராஜாவின் மீதான அவதூறு வழக்கு, சென்னை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாஜ மூத்த தலைவர் எஸ்.ராஜாவின் மீதான அவதூறு வழக்கு, சென்னை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பெண்களை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. முன்னாள் திமுக அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அளித்த புகாரில் ஈரோடு நகர காவல் துறை வழக்கு பதிவு செய்தது. பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த வழக்கில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எதிரான இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story