ஒத்திவைக்கப்பட்ட சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கு !!

ஒத்திவைக்கப்பட்ட சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கு !!

 சவுக்கு சங்கர் 

பிரபல youtube-ஆன சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனை அடுத்து அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரைக் கடந்த 4- தேதி அதிகாலையில் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல தேனியில் அவர் தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கி இருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து மதுரை மாவட்ட கோட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். இந்நிலையில் அந்த வழக்கு தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் தரப்பு வக்கீல் இன்று ஆஜராகவில்லை. கோவையில் மற்றோர் வழக்கில் ஆஜராக செல்வதால் கால அவகாசம் கூறப்பட்டது.

மேலும் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக்கூறி குறுஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து இந்த மனு மீதான விசாரணை வருகின்ற 30ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story