புளியம்பட்டி அருகே பணம் பறிமுதல்

புளியம்பட்டி அருகே பணம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம் 
புளியம்பட்டி அருகே ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புளியம்பட்டி அருகே ரு ஒரு லட்சத்து 90 ஆயிரம் தேர்தல் ஆம்னி வேனில் இருந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் தானா புதூர் போலீஸ் நிலையம் சோதனைச் சாவடியில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இருந்ததை தேர்தல் பறக்கும் பாடையினர் கண்டுபிடித்தனர் அதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதி சேர்ந்த கார்த்திக் குமார் வயது 37 என்பது ஆலத்தூரில் பனியன் கம்பெனி நடத்தி வருவதாகவும் புஞ்சைபுளியம்பட்டி வங்கியில் பணத்தை கட்ட எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை இதனால் இதனை எடுத்து பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் சத்தியமங்கலம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story