ஜெயக்குமார் வங்கி கணக்கை ஆய்வு செய்ய சிபிசிஐடி முடிவு

ஜெயக்குமார் வங்கி கணக்கை ஆய்வு செய்ய சிபிசிஐடி முடிவு

ஜெயக்குமார் (பைல் படம்) 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் பல்வேறு கட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனியார் மற்றும் அரசு வங்கிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்துள்ளனர். அதன் வரவு செலவு விபரங்களை ஆய்வு செய்ய உள்ளதாக சிபிசிஐடி போலீஸார் இன்று (மே 31) முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story