ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் - எஸ்.ஆர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் - எஸ்.ஆர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை


எஸ்.ஆர் சேகர் 


சென்னை ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவை:தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலின்போது சென்னையில் நான்கு கோடி ரூபாய் பணம் பிடிப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என சொல்லப்பட்ட நிலையில் அது கட்சிப் பணம் என்ற தகவலும் வெளியான நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சேகர் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story