99 சதவீத காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன

தமிழகத்தில் உள்ள 99 சதவீத காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 1,500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், 99 சதவீத காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன் அந்தப் பதிவுகளை பத்திரப்படுத்துவதற்காக உரிய விதிகளை வகுக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமுதீன் என்பவர் 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags

Next Story