ஜாபர்சாதிக் குடோனிற்கு சீல் வைத்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஜாபர்சாதிக் குடோனில் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்களை கைப்பற்றி குடோனுக்கு சீல் வைத்தனர்.
சென்னை பெருங்குடியில் செயல்பட்டு வந்த ஜாபர்சாதிக்கின் குடோனில் இன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீடு குடோன் போல நடத்தி வரப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனைக்கு பிறகு அந்த குடோனை அதிகாரிகள் சீல் வைத்தனர். சோதனையில், போதைப்பொருளை எடை போடும் மிஷின், போதைப்பொருளை பேக்கிங் செய்யும் மிஷின், மற்றும் சில புகைப்படங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதாவிற்கு ஒரு நாள் காவல் துறையினர் காவல் வழங்கி டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story