தமிழர் தலைநிமிர்ந்து வாழ மத்தியில் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்.பி

தமிழர் தலைநிமிர்ந்து வாழ மத்தியில் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி.பிரசாரம்  

தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. திருச்செந்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி திருச்செந்தூர் தேரடி திடலில் நேற்று மாலையில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்காக அல்ல. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை போல் 2-வது சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நமது அடையாளங்களை, மொழியை, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.னதா நாட்டில் இருக்கும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. இந்து மதத்தை இவர்கள் தான் காப்பாற்றுவது போல பேசுகிறார்கள். இவர்களிடமிருந்து இந்து மக்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் ஸ்டாலின் எத்தனையோ புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்காக கொண்டு வந்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயண வசதி, கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. என்றார்.

Tags

Next Story