சவுக்கு சங்கர் கைது: தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை: காவல் ஆணையர்

சவுக்கு சங்கர் கைது: தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை: காவல் ஆணையர்

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பி்த்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பி்த்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சவுக்கு சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

என்றும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story