சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர்

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரின் தாயர் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விலகியது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனக்கூறி விலகினர்.


Tags

Next Story