சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்
![சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்](https://king24x7.com/h-upload/2024/02/01/377372-image3a1000706908.webp)
சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மேயர் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (31.01.2024) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாமன்ற கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அவர்களின் வார்டுகளில் உள்ள குறைகளை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர் மாநகராட்சி மேயர் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார் , கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story