சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் மூன்றாமிடம்

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் மூன்றாமிடம்

  சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.30 சதவீத தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் மூன்றாமிடம் பிடித்துள்ளது. 

சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.30 சதவீத தேர்ச்சி பெற்று சென்னை மண்டலம் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

சி பி எஸ் சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது, ஒட்டுமொத்தமாக 93.60 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.48% அதிகம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் சென்னை மண்டலம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது 99.30% 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 20 லட்சத்தி 95 ஆயிரத்து 467 மாணவர்கள் தேர்ச்சி. ஒட்டுமொத்தமாக அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற ஆண்கள் 92.71% பெண்கள் 94.75% மாற்று பாலினத்தவர் 91.30%. இந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் 2.04% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மொத்தம் 86.72 பேர் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 83.95 % பேர் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் 99.30 சதவீதத்துடன் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதத்துடன் முதல் இடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.

Tags

Next Story