வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு.

மு.க. ஸ்டாலின் 

இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 12 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 கோட்டாட்சியர் குடியிருப்புகள், 1 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், 1 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, 4 வட்டாட்சியர் குடியிருப்புகள், 13 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், 1 கிராம நிருவாக அலுவலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் 3 கோடியே 6 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 கோடியே 44 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

Tags

Next Story