எழும்பூர் பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

எழும்பூர் பகுதியில் மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
இன்று (24.01.2024) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78, சூளை, உமா சுராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, மண்டலக்குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், நியமனக் குழு உறுப்பினர் திரு.சொ. வேலு, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி புனிதவதி எத்திராஜன், திருமதி ஸ்ரீ இராஜேஸ்வரி, மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story