முதல்வர் அறிவிப்பு - கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

முதல்வர் அறிவிப்பு - கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் வரவேற்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கோவில்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பில் கடலை மிட்டாய் குறு குழுமம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்புக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கடலை மிட்டாய் குறு குழுமம் அமைக்கப்படும் என தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்., தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர் வரவேற்பும் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக முதல்வரின் அறிவு கடலை மிட்டாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், சிறிய முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு ‌மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Tags

Next Story