விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்பு?

திருச்சியில் புதிதாக திறக்கப்பட உள்ள விமான நிலைய புதிய முனையத்தை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்தார்.

திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் புதிய முனையம் கட்ட இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ம் ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது.

ஆனாலும் கூடுதல் செலவினமாக ரூ 249 கோடி என மொத்தம் ரூ 1200 கோடி மதிப்பிட்டில் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் புதிய முனையம் திறப்பு விழா காண உள்ளது. புதிய முனையை திறப்பு விழாவில் பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக நேற்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய முனையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு :- வரும் இரண்டாம் தேதி புதிய முனையம் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். எனவே அவரது வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மாநகர காவல் ஆணையர் காமினி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உடன் இருந்தனர்

Tags

Next Story