பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்- சிவதாஸ் மீனா

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று காலை 6:30 மணிக்கு மேட்டுப்பாளையம் வருகை தந்த தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் அதிகாரிகளிடம் விரைவில் பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் நான்காம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.சுமார் ரூபாய் 1100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.பின்னர்நகராட்சிக்கு அலுவலகம் வருகை தந்த அவருக்கு நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகராட்சி ஆணையாளர் அமுதா, ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மண்டல இயக்குநர் இளங்கோவன்,திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார்,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Tags

Next Story