தேனாம்பேட்டை பகுதியில் தலைமைச் செயலாளர் ஆய்வு

தேனாம்பேட்டை பகுதியில் தலைமைச் செயலாளர் ஆய்வு

தலைமை செயலாளர் ஆய்வு 

தேனாம்பேட்டை பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தார்.

இன்று (08.06.2024) தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், மாம்பலம் கால்வாயில் சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் ரூ.59.42 கோடி மதிப்பில் 3065 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளில் அன்பு காலனி பகுதியில் 487 மீ. நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவர், ரூ.11.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு நடை மேம்பாலங்களையும்,

மாம்பாலம் கால்வாயில் ரோபொடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரம் பயன்படுத்தி ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்..

Tags

Next Story