மின்னகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

மின்னகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அமைந்துள்ள மின்னகத்தை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறியது, கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்வதற்கு சென்னையில் 60 பறக்கும் படை சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்திற்கு அணுகி சீரான மின்சாரம் பெறுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தல் கோடைகாலத்தில் அதிகமாக மின்சாரை தேவைப்படுவதாகவும் என்.எல்.சி, காற்றாலை மூலமாகவும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது என்றவர், இந்த மாத இறுதிவரை மின் தேவை அதிகமாக இருக்கும் என்றார் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

Tags

Next Story