ஆசிரியர் போராட்ட வழக்கு முடித்து வைப்பு

ஆசிரியர் போராட்ட வழக்கு முடித்து வைப்பு

ஆசிரியர் போராட்டம் 

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரிய இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவ - மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக மாலினி என்ற தாய் வழக்கு தொடர்ந்தார். ஆண்டு இறுதி தேர்வு நெருங்கியுள்ள நிலையில் உரிய தீர்வு காண அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story