சாதனை மாணவன் சின்னத்துரைக்கு முதல்வர் பாராட்டு

சாதனை மாணவன் சின்னத்துரைக்கு முதல்வர் பாராட்டு

மாணவன் சின்னத்துரையுடன் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமை தாக்குதல் தந்த வலிகளுக்கு மத்தியிலும் கல்வியை கைவிடாது படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவன் சின்னத்துரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இன்று (மே 7) தமிழக முதல்வர் ஸ்டாலினை மாணவர் சின்னத்துரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story