அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய ஆட்சியர்!

வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பேசுகையில்,"தேர்தல் பணியில் சுணக்கம் காட்டக்கூடாது. தங்களது பணிகளை பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது போல சிறப்பாக செய்ய வேண்டும்,"என்றார். இந்த நிகழ்வில் வேலூர் வட்டாட்சியர் கோபி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story