தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

வேலூரில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காட்பாடி சன் பீம் பள்ளி மைதானத்தில் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத், காட்பாடி வட்டாட்சியர் சரவணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேஷ் கண்ணா, சிவராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு உள்பட பலர் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story