ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தினைப்  பயன்பாட்டிற்குத் தொடங்கி வைப்பு

சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி., ஆகியோர் திறந்து வைத்தனர்


சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்பி, ஆகியோர் திறந்து வைத்தனர்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இன்று (13.03.2024) இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, திருப்பள்ளித் தெரு, பி.கே.கார்டன் பகுதியில் ரூ.3.08 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெயசந்திர பானு ரெட்டி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் திரு.பி. ஸ்ரீராமுலு, நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் திரு.ராஜேஷ் ஜெயின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story