பிரியங்கா வெற்றிக்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம்: செல்வப்பெருந்தகை

பிரியங்கா வெற்றிக்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம்: செல்வப்பெருந்தகை

செல்வப் பெருந்தகை

பிரியங்கா வெற்றிக்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பிரியங்கா வெற்றிக்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 45 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 11-ந்தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பிரசாரம் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. பாராளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்காவின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பம் உள்ள தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் தமிழக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story