வாணியந்தலில் சமுதாய வளைகாப்பு

வாணியந்தலில் சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சீர்வரிசை மற்றும் ஊட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டன
கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், மோகன்குமார் முன்னிலை வகித்தனர். ருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சேலைகள், மஞ்சள், குங்குமம், பூ, பழம்,பாதாம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள், தடுப்பூசி, மருத்துவ பரிசோதனை, மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்தல், தாய்ப்பாலின் மகத்துவம், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story