தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்

பைல் படம் 

தூத்துக்குடி, நெல்லையில் இருந்து சென்னை செல்கின்ற  தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.4ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நேற்று இரவு 12 மணியில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் இருந்து சென்னை செல்கின்ற தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.4ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறை வரை வேலை நிறுத்த போராட்டம் நீடித்தால் தூத்துக்குடி நெல்லையிலிருந்து சென்னைக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகள் ஆறாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கி பயணிகளின் பயணத்தை தடை இன்றி நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story