தனுஷூக்கு செக்: இனி இப்படிதான்... தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு!

தனுஷூக்கு செக்: இனி இப்படிதான்... தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு!

தனுஷ் 

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்க முடிவெடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலேசித்து அதன் பின்னர் படத்தை கமிட் செய்ய வேண்டும் என்று தீர்மான நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் தனுஷ் நிறைய தயாரிப்பாளரிடம் பணத்தை வாங்கிவிட்டு படத்தை முடித்து கொடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. தனுஷ் வேறு ஒரு படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்குமுன் அவரது 50 படமான ராயன் படத்தை தொடங்கி விட்டார்.

ராயன் படத்திற்கு முன்பு அட்வான்ஸ் வாங்கிய படங்கள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்கள் OTT யில் வெளியிட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

"முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும்" வேண்டும் என்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

Tags

Next Story