காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடும்

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடும்

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். 

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் என்றால் ஊழல் என தனது அடையாளத்தை வைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராக 3வது முறையாக இருந்தவர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடக்கிறது. சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 351 கோடி ரூபாய் வந்துள்ளது. 176 பேக்குகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல்; சமீபத்தில் 8000 கோடி ருபாய்க்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஐ.டி, இ.டி வேண்டாம் என்கிறார்கள். இந்த நாட்டை கொள்ளை அடிப்பதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடுவார்கள், ஏன் விற்றுகூட விடுவார்கள். மிக மோசமான அவலமான நிலைக்கு தமிழகத்தின் தலைநகரம் தள்ளப்பட்டிருக்கிறது.

4000 கோடி ரூபாய் செலவு செய்துவிட்டோம்; ஒருச்சொட்டு தண்ணீர்கூட நிற்காது என்றார்கள். இப்போது பாதிதான் செலவு பண்ணினோம் என்கிறார்கள். யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற அகந்தையில் திமுக அரசு உள்ளது. அரசு தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர்கள். மக்களுக்கு நிவாரணம் 6000 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறீர்கள். அதை வங்கிகணக்கில் செலுத்த வேண்டும். என்று கூறினார்.

இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story