காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணமடைந்த வழக்கில் - காவல்துறைக்கு டிடிவி தினகரன் அறிவுரை !!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணமடைந்த வழக்கில் - காவல்துறைக்கு டிடிவி தினகரன் அறிவுரை !!

டிடிவி தினகரன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இரண்டு நாளாக மாயமானதாக கூறப்பட்ட நிலையில் திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. என அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்தது தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்பி தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் ஜெயக்குமார் தனசிங் திசையன்விளை அருகே உள்ள தோட்ட இல்லத்தில் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சளிக்கின்றது என்று கூறினார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயக்குமார் தனசிங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட சிலநபர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் ஜெயக்குமார் தனசிங் அவர்கள் கடந்து 30ம் தேதியே அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் அலட்சியப் போக்கே அவர் சடலமாக மீட்கப்பட்டதற்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. பலமுறை சுட்டிக்காட்டியும் கொலை ,கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் தாராள புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதன் விளைவாக தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கிய அனைத்து தரப்பினரின் பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே பொதுமக்கள் விவசாயிகள் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யவும் கைது செய்யவும் மட்டுமே காவல்துறையை பயன்படுத்தாமல் உரிய சுதந்திரத்தை வழங்கி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்கவும் பயன்படுத்துவதோடு ஜெயக்குமார் தனசிங் அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் என தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்

Tags

Next Story