காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நான்கு நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நான்கு நாள் சுற்றுப்பயணம்

செல்வ பெருந்தகை

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று முதல் முறையாக தமிழகம் முழுவதும் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் நாளை மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகிகளுடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தொடர்ந்து, கன்னியாகுமரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் உலக மகளிர் தின மாநாட்டில் பங்கேற்கிறார்.

செவ்வாய் கிழமை காலையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், மாலையில் விருதுநகர், மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் புதன் கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் தொடர்ந்து,

அன்றைய தினம் மாயவரத்தில் இருந்து இரவு விரைவு ரயில் மூலம் சென்னை வருகிறார்.

Tags

Next Story