நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மண் திருட்டு

நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மண் திருட்டு

மணல் திருட்டு

நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் மண் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை சுற்றியுள்ள கீழ்வெங்கடாபுரம், ரெட்டிவலம், வேட்டாங்குளம், பள்ளூர், ஆட்டுப்பாக்கம், அசநெல்லிகுப்பம், சயனபுரம், கணபதிபுரம், சேந்தமங்கலம், கீழ்வெண்பாக்கம், திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி, குளம், கசம், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றிலிருந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன், லாரி, டிராக்டர்களில் தினமும் மண் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மண் திருட்டை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தொடர்ந்து நடைபெறும் மண்திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story