ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பிப்.6 வரை நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை பிப்ரவரி 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்று நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரண்டு படகையும் அதிலிருந்து 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் பிப்ரவரி மாதம் 6 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 6 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story