மின்சாரம் தாக்கி உயிரிழந்த பசுமாடு!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பசுமாடு!

 உயிரிழந்த பசுமாடு

நெமிலி அருகே நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த எஸ் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு சொந்தமான பசுமாடு கீழ் வெண்பாக்கத்தில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நிலத்தில் மின்கம்பம் அருகே அறுந்து கிடந்த மின் வயரை பசு மாடு மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலின் பெயரில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story