சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்குதல் : கண்டன ஆர்ப்பாட்டம்

சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்குதல் : கண்டன ஆர்ப்பாட்டம்

சிபிஎம் கட்சி அலுவலகம் தாக்குதலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை சிபிஎம் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலிறுயுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து வன்முறை வெறியாட்டம் நடத்திய சாதி வெறி கும்பலை கண்டித்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் தூத்துக்குடி முத்தையாபுரம் பஜாரில் சிபிஎம் சார்பில் புறநகர குழு உறுப்பினர் சி.பூராடன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து, புறநகர் குழுச் செயலாளர் ஆ.முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர், க.பொன்ராஜ், புறநகர் குழு உறுப்பினர்கள் ப.வெள்ளைச்சாமி த.வன்னியராஜா, பா.டேனியல்ராஜ், ச.வீரப்பெருமாள் எம்.பாக்கியராஜ், கிளைச் செயலாளர்கள் கே.காசிராஜன், மாரியப்பன், கே. முருகன், கே.எலியாஸ், சுடலைமணி, சுமைப்பணி சங்க நிர்வாகி ஆதிமூலம், கோட்டைச்சாமி, கட்டுமான சங்க நிர்வாகி ரூபஸ்.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story