ரஷிய- இந்திய கலாசார குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி

ரஷிய- இந்திய கலாசார குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி

 ரஷிய- இந்திய கலாசார குழு

அரக்கோணத்தில் ரஷ்ய இந்திய கலாச்சார குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரஷிய- இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ரஷிய- இந்திய கலாசார குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஷிய நாட்டின் இசை மற்றும் நடனத்தை இந்திய கலாசாரத்துடன் ஒற்றுமைப்படுத்தி மாணவர் களுக்கு கற்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த ரஷிய- இந்திய கலாசார குழுவினரை பள்ளி தாளாளர் ஏ.சுப்பிரமணி யம், கூடுதல் தாளாளர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story