கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம்: நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணம்: நீதிமன்றம் உத்தரவு

உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனு அளித்தார். சம்பவம் நடந்து 20 மாதங்கள் கடந்தும், மாணவியின் தாய் மற்றும் வன்முறையை தூண்டியவர்கள் எவரையும் விசாரணை செய்யவில்லை என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம்.

Tags

Next Story