மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு

மாணிக்கம் தாகூர் 

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Tags

Read MoreRead Less
Next Story