பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் - ஓ பி எஸ் கண்டனம்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் - ஓ பி எஸ் கண்டனம்.

ஓ.பன்னீர் செல்வம் 

தமிழ்நாட்டில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காமல் மாணவ மாணவியரின் கல்வியோடு விளையாடும் திமுக அரசுக்கு ஓ பி எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவ மாணவியரின் கல்வியோடு விளையாடும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாணவ மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதுள்ள நடைமுறைகளின் படி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story