மூன்று சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்

மூன்று சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்

எடப்பாடி பழனிச்சாமி 

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட மீதமுள்ள மூன்று பேரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு முழு விடுதலை அளித்து குடும்பத்துடன் வாழ் நாளை கழிக்க திமுக அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

32 ஆண்டுகால நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வயது முதிர்ந்த மூன்று இலங்கை தமிழர்களுக்கு உண்மையான விடுதலை வழங்காத திமுக அரசின் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீதமுள்ள மூன்று பேரும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயக்குமார், உடல்நல குறைவால் அவதியுரும் ராபர்ட் பயஸ், முருகன் ஆகியோரின் கடைசி காலத்தில் எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு திருச்சி முகாமில் தனிமை சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய வெளியுறவு துறையையும் திமுக அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்தியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story