மத்திய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!!

மத்திய  அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!!

செல்வப்பெருந்தகை

ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்துவிட்டதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள் என பட்ஜெட் குறித்த பாமக தலைவர் அன்புமணி கூறிய கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Tags

Next Story