கூட்டுறவு வங்கி பொது மேலாளருக்கு பிரிவுபசார விழா

கூட்டுறவு வங்கி பொது மேலாளருக்கு பிரிவுபசார விழா

வேலூர் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

வேலூர் நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

வேலூர் நகர கூட்டுறவு வங்கியில் 26 ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஆர்.பாஸ்கரன். இவர் தற்போது பொது மேலாளராக (பொறுப்பு) பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருக்கு வங்கியில் பிரிவு உபசார விழா நடந்தது. கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் கலைமணி தலைமை தாங்கினார்.

கூட்டுறவு சார்பதிவாளர் பவித்ரா முன்னிலை வகித்தார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட செயலாளருமான எம்.ஏ.ராஜா கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார். விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொருளாளர் ஹரி, நிர்வாகி விவேகானந்தன், கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனர்கள் ரேணு கோபால், அஷ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பணி ஓய்வு பெற்ற பொதுமேலாளர் பாஸ்கரன், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் திருகுண அய்யப்பதுரை, கூட்டுறவு துணை பதிவாளர் சுரேஷ் குப்தா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story