திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி சீரழிவு - என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை !!

திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி சீரழிவு - என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை !!

ஓ.பன்னீர்செல்வம் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,தொழில்கள் வளர வேண்டும் தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அரசு செயல்படுமேயானால் உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்கத்திற்கான வருவாய் பெருகி நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் தொழில்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சீரழிந்து கொண்டிருக்கிறது.

தொழில் நிறுவனங்களை நடுவில் இருந்து மீட்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் நிறுவனங்களை நசுக்கும் பணியை செய்து வருகிறது. மின் கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வு உச்சநேரம் மின் கட்டணம் மேற்கூரை சூரிய சக்திக்கான மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி தொழிலையே மேற்கொள்ள முடியாத அளவுக்கு தொழில் முனைவோரையும் தொழிலாளர்களையும் வஞ்சித்து வருகின்ற அரசாக திமுக அரசு வந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக வெள்ளிச்சந்தையில் இருந்து மின்சாரம் பெற்று வரும் தொழில் துறையினருக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 34 காசு மேல் வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளதாக தொழில்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உயிர் அழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழிற்சாலைகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் கழகத்திடம் இருந்து மட்டுமல்லாமல் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சந்தை மின்சாரத்தை எடுத்து வர தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வழித்தடம் பயன்படுத்தப்படுவதால் அதற்கான கட்டணத்தை தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன்படி யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 96 காசுகள் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஒரு யூனிட்டுக்கு 34 காசுக்கு மேல் வரி வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூறியுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் காரணமாக தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை நலிந்து விடுவது மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கும் வேலை பறிபோகும் சூழ்நிலை உண்டாகும். இது தவிர அரசாங்கத்தின் வருமானமும் குறையக்கூடும் முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மின்சாரத்தை வெளிச்சந்தையில் இருந்து பெரும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல் வரி விதிப்பதை கைவிட வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உறுப்பு மீட்பு குழுவின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story