திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில்  தரிசனம்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றது. விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

Tags

Next Story