திண்டுக்கல் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு

திண்டுக்கல் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு

முதல்வருடன் சிபிஎம் கட்சியினர்

திண்டுக்கல் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அது எந்த தொகுதி என்பது இன்று அடையாளம் காணப்பட இருந்தது இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர்.

பின்னர் முதலர்வருடன் சிபி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் தொகுதி பங்கீடு குழுவினர் முதல்வருடன் சந்தித்தனர். இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் , அந்த இரண்டு தொகுதி எவை என அடையாளம் காணப்பட்டு கையெழுத்தாகியது.

பின்னர் பேட்டி அளித்த கே.பாலகிருஷ்ணன் மதுரை திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.

நாங்கள் வென்ற கோவையை விட்டு கொடுத்தோம், அவர்கள் வென்ற திண்டுக்கல்லை எங்களுக்கு விட்டு கொடுத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் போட்டியிட்டுள்ளோம்.. என் அவர் பேசினார்

Tags

Next Story